செய்திகள்

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்: வைகோ

Published On 2017-01-06 14:49 IST   |   Update On 2017-01-06 15:33:00 IST
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும் என்று வைகோ கூறினார்.
ஆலந்தூர்:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வரலாறு காணாத வறட்சி தமிழகத்தை வாட்டி வதைக்கிறது. இதனால் விவசாயிகள் தற்கொலை சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

இது மேலும் தொடர கூடாது. தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும். உயிர் இழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு குறித்த விவாதம் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் மாறி, மாறி நடத்தி கொண்டிருக்கிற நிலையில் ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காதா? என்ற ஏக்கம், கவலை தென் மாவட்ட மக்களுக்கு நிலவுகிறது.

ம.தி.மு.க. சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News