செய்திகள்

ஈரோடு கனி ராவுத்தர்குளத்தில் உள்ள 21 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

Published On 2016-09-25 22:39 IST   |   Update On 2016-09-25 22:39:00 IST
ஈரோடு கனி ராவுத்தர் குளம் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 21 வீடுகள் இடித்து தரைமாக்கப்பட்டன.

ஈரோடு:

ஈரோடு கனி ராவுத்தர் குளத்தில் கரையோரம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாகவும் எனவே இந்த வீடுகளை அகற்ற வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது,

இதையொட்டி அந்த வீடுகளில் உள்ளவர்களை காலி செய்யும்படி ஈரோடு மாநகராட்சி சார்பில் அறிவிப்பு கொடுக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று மதியம் பொக்லைன் எந்திரம் மூலம் கனி ராவுத்தர் குளம் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 21 வீடுகள் இடித்து தரைமாக்கப்பட்டன.

இதையொட்டி அங்கு போலீஸ், பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பல வருடங்களாக அங்கு வசித்து வந்தவர்கள் தங்களது வீடுகள் இடிக்கப்படுவதை சோகமாக பார்த்தனர்.

Similar News