விளையாட்டு

எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்- உதயநிதி ஸ்டாலின் டுவிட்

Published On 2024-12-19 10:57 IST   |   Update On 2024-12-19 10:57:00 IST
  • மேற்கு மாம்பலத்தில் உள்ள இல்லத்திற்கு சென்ற அஸ்வினுக்கு அங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • ஒரு கிரிக்கெட் வீரராக உங்கள் தாக்கம் என்றென்றும் நினைவில் இருக்கும்.

சென்னை:

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அஸ்வின் ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன்பின்னர் மேற்கு மாம்பலத்தில் உள்ள இல்லத்திற்கு சென்ற அஸ்வினுக்கு அங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனிடையே எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என அஸ்வினுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- சென்னை முதல் உலக அரங்கு வரை, தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.

ஒரு கிரிக்கெட் வீரராக உங்கள் தாக்கம் என்றென்றும் நினைவில் இருக்கும். ஒவ்வொரு விக்கெட்டிலும், ஒவ்வொரு ஸ்பெல்லிலும், ஒவ்வொரு போட்டியிலும், நீங்கள் விளையாட்டை உயர்த்தி, எண்ணற்ற நினைவுகளை எங்களுக்குக் கொடுத்தீர்கள். எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்! என கூறியுள்ளார். 



Tags:    

Similar News