டென்னிஸ்

துபாய் ஓபன் டென்னிஸ்: காயத்தால் விலகிய நம்பர் 3 வீராங்கனை

Published On 2026-02-19 03:00 IST   |   Update On 2026-02-19 03:00:00 IST
  • துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
  • இதில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா தோல்வி அடைந்தார்.

துபாய்:

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, குரோசியாவின் அண்டோனியா ருசிக் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட குரோசிய வீராங்கனை 2வது செட்டை 6-4 என வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் குரோசிய வீராங்கனை 1-0 என முன்னிலை பெற்றிருந்தபோது ரிபாகினா காயத்தால் விலகினார். இதனால் குரோசிய வீராங்கனை காலிறுதிக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News