டென்னிஸ்

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் ரிபாகினா

Published On 2025-10-24 22:07 IST   |   Update On 2025-10-24 22:07:00 IST
  • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
  • கஜகஜஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா காலிறுதியில் வெற்றி பெற்றார்.

டோக்கியோ:

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் காலிறுதி சுற்றில் கஜகஸ்தான் எலினா ரிபாகினா, கனடாவின் விக்டோரியா போகோ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதியில் ரிபாகினா, செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவாவை சந்திக்கிறார்.

Tags:    

Similar News