டென்னிஸ்
ஜப்பான் ஓபன் டென்னிஸ்: மரியா சக்காரி அதிர்ச்சி தோல்வி
- ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
- 2வது சுற்றில் கனடா வீராங்கனை வெற்றி பெற்றார்.
டோக்கியோ:
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் 2வது சுற்றில் கனடா நாட்டின் லெய்லா பெர்னாண்டஸ், கிரீஸ் நாட்டின் மரியா சக்காரியுடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய லெய்லா பெர்னாண்டஸ் 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி தொடரில் இருந்து வெளியேறினார்.