டென்னிஸ்

மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ்: முதல் சுற்றில் போபண்ணா ஜோடி வெற்றி

Published On 2025-04-06 22:09 IST   |   Update On 2025-04-06 22:09:00 IST
  • மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
  • இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

மாண்டே கார்லோ:

மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெற உள்ளது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ-சிலியின் அலெஜாண்ட்ரோ ஜோடியுடன் மோதியது.

இதில் போபண்ணா ஜோடி 6-3, 7-5 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

நாளை மறுதினம் நடைபெறும் 2வது சுற்றில் போபண்ணா ஜோடி, இத்தாலி ஜோடியுடன் மோதுகிறது.

Tags:    

Similar News