விளையாட்டு

பிடி உஷா

null

பாரதிய ஜனதா உள்பட எந்த கட்சியிலும் சேரமாட்டேன்- தடகள வீராங்கனை பி.டி.உஷா

Published On 2022-07-09 06:21 GMT   |   Update On 2022-07-09 13:58 GMT
  • விளையாட்டில் நான் சாதித்ததால் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.
  • எனக்கு பாரதிய ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு என அனைத்து கட்சியினரையும் பிடிக்கும்.

திருவனந்தபுரம்:

கேரளாவை சேர்ந்த ஒலிம்பிக் தடகள வீராங்கனை பி.டி.உஷா டெல்லி மேல் சபையின் நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

பாரதிய ஜனதா ஆட்சி காலத்தில் அவருக்கு நியமன எம்.பி. பதவி கிடைத்து இருப்பதால் அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேரப்போவதாக தகவல் பரவியது.

இதனை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் சிலர் விமர்சித்து இருந்தனர். இதற்கு பதில் அளித்து பி.டி.உஷா கூறியதாவது:-

எனக்கு விளையாட்டு பிடிக்கும். விளையாட்டில் நான் சாதித்ததால் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். இதற்காக நான் எந்த அரசியல் கட்சியிலும் சேரப்போவதில்லை.

பாரதிய ஜனதா உள்பட எந்த கட்சியிலும் இணைய மாட்டேன். எனக்கு பாரதிய ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு என அனைத்து கட்சியினரையும் பிடிக்கும்.

எம்.பி.யானால் நான் டெல்லியிலேயே இருக்க மாட்டேன். நான் நடத்தி வரும் பள்ளியை விட்டுவிட முடியாது.

அதே நேரம் விளையாட்டிற்கும், பொது சேவையிலும் என்னால் முடிந்ததை செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News