விளையாட்டு
null
ஆசிய தடகள போட்டி: வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் செர்வின் செபாஸ்டியன்
- 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் பங்கேற்றுள்ளனர்.
- 20 கி.மீட்டர் நடைப்பந்தய போட்டி இன்று நடைபெற்றது.
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குமி நகரில் இன்று முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் இந்திய அணி சார்பில் 59 பேர் கலந்து கொண்டனர். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் 20 கி.மீட்டர் நடைப்பந்தய போட்டி இன்று நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த செர்வின் 3-வது இடத்தைப்பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 1 மணி நேரம் 21 நிமிடங்கள் 13 விநாடிகளில் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.