விளையாட்டு
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் லக்ஷயா சென்
- ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
- இத்தொடரில் இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதியில் வெற்றி பெற்றார்.
பர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை வரை நடைபெறும் 1,000 தரவரிசை புள்ளி கொண்ட இந்தப் போட்டியில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், மலேசிய வீரர் லீயுடன் மோதினார்.
இதில் லக்ஷயா சென் 20-22 என முதல் செட்டை இழந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட சென் அடுத்த இரு செட்களை 21-16, 21-19 என கைப்பற்றினார்.
இறுதியில், லக்ஷயா சென் 20-22, 21-16, 21-19 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.