கிரிக்கெட் (Cricket)

உங்களுக்கு ஒன்றும் தெரியாது- மனைவி கலாய்த்தது குறித்து மனம் திறந்த தோனி

Published On 2026-01-09 12:36 IST   |   Update On 2026-01-09 12:36:00 IST
  • நான் 2015-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றேன்.
  • ஒரு நாள் நாங்கள் இருவரும் ஒன்றாக ஒரு போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டார். தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் கிரிக்கெட் குறித்து தானும் தனது மனைவியும் பேசிய நகைச்சுவையான சம்பவம் குறித்து எம் எஸ் தோனி கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:-

நான் 2015-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றேன். அதனால் என் குடும்பத்துடன் செலவிட எனக்குக் கொஞ்சம் கூடுதல் நேரம் கிடைத்தது. பொதுவாக, நானும் என் மனைவியும் கிரிக்கெட் பற்றி அதிகம் பேசுவதில்லை. ஆனால் ஒரு நாள் நாங்கள் இருவரும் ஒன்றாக ஒரு போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

பந்துவீச்சாளர் ஒரு வைடு வீசினார். பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியே வந்து ஸ்டம்பிங் செய்யப்பட்டார். என் மனைவி உடனடியாக, அவர் அவுட் இல்லை, வைடு பந்தில் ஸ்டம்பிங் செய்ய முடியாது என்று கூறினார்.

அவள் அவுட் இல்லை என்று சொல்லி முடிப்பதற்குள், அந்த பேட்ஸ்மேன் ஏற்கெனவே திரும்பி நடக்கத் தொடங்கிவிட்டார். அவரை மீண்டும் அழைப்பார்கள் என்று அவள் உறுதியாக நம்பினாள்.

நான் அவளிடம், 'நோ-பால் பந்தில் மட்டும்தான் ஸ்டம்பிங் செய்தால் அவுட் கிடையாது. வைடு பந்தில் அவுட் உண்டு என்று கூறினேன். அதற்கு அவள், 'உங்களுக்கு ஒன்றும் தெரியாது, பாருங்கள், நடுவர்கள் அவரை மீண்டும் அழைப்பார்கள்' என்று பதிலளித்தாள் என தோனி கூறினார்.

Tags:    

Similar News