கிரிக்கெட் (Cricket)

முத்தரப்பு தொடர்: நியூசிலாந்துக்கு 135 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தெ. ஆப்பிரிக்கா

Published On 2025-07-22 18:34 IST   |   Update On 2025-07-22 18:34:00 IST
  • தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 41 ரன்கள் எடுத்தார்.
  • நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, மில்னே, சாண்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஹராரே:

ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெற்று வரும் 5-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான் இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் 41 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, மில்னே, சாண்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Tags:    

Similar News