கிரிக்கெட் (Cricket)

சுப்மன் கில்லால் மீண்டும் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆபத்து- அஸ்வின்

Published On 2025-08-20 18:08 IST   |   Update On 2025-08-20 18:08:00 IST
  • துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் சுப்மன் கில் கண்டிப்பாக தொடக்க வீரராக களமிறங்குவார்.
  • சஞ்சு சாம்சன் டி20 கேரியர் முடியப்போவதாக அஸ்வின் கூறியுள்ளார்.

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோர் கழற்றி விடப்பட்டது பல ரசிகர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியது.

அதே போல டி20 கிரிக்கெட்டில் வேகமாக ரன்கள் குவிப்பதில் தடுமாற்றத்தைக் கொண்டுள்ள சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் சுப்மன் கில் கண்டிப்பாக தொடக்க வீரராக களமிறங்குவார் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதனால் தொடக்க வீரராக களமிறங்கி சதங்களை அடித்து மறுவாழ்வு பெற்ற சஞ்சு சாம்சன் டி20 கேரியர் முடியப்போவதை நினைத்தால் வருத்தமாக இருப்பதாக அஸ்வின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

குஜராத்துக்காக நிறைய ரன்கள் அடித்துள்ள சுப்மன் கில் துணைக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் 2024 டி20 உலகக் கோப்பையில் ஜெய்ஸ்வால் 3-வது ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்தார். அப்படிப்பட்ட அவரையும் ஷ்ரேயாஸ் ஐயரையும் நீக்கியுள்ளதற்காக நான் சோகமடைந்துள்ளேன்.

ஜெய்ஸ்வால் நல்ல ஃபார்மில் இருக்கிறார். கில் வருங்காலத்தில் ஆல் ஃபார்மட் கேப்டனாக இருக்கலாம். ஆனால் 3 ஃபார்மட்டிலும் ஒரே கேப்டன் இருக்க வேண்டிய அவசியமில்லை. கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சஞ்சு சாம்சனுடைய இடத்துக்கு ஆபத்து வந்துள்ளது என்பது சோகமான விஷயமாகும். அதனால் சஞ்சு கண்டிப்பாக விளையாடப் போவதில்லை. சுப்மன் தொடக்க வீரராக விளையாடுவார்.

என்று கூறினார்.

Tags:    

Similar News