கிரிக்கெட் (Cricket)

2 குழந்தைகள் உள்பட 11 பேர் பலி: கிரிக்கெட்டுக்கு இது ஒரு சோகமான நாள்- அனில் கும்ப்ளே இரங்கல்

Published On 2025-06-05 11:26 IST   |   Update On 2025-06-05 11:26:00 IST
  • ஆர்சிபி அணியின் வெற்றி பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர்.
  • காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என கும்ப்ளே கூறினார்.

ஐ.பி.எல். கோப்பை வென்ற ஆர்.சி.பி. அணிக்கு கர்நாடக மாநில அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழா விதான சவுதாவில் நடைபெற்றது.

இதையடுத்து, சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மைதானத்தில் திரண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் கிரிக்கெட்டுக்கு இது ஒரு சோகமான நாள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். மேலும், ஆர்சிபி-யின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என கூறினார். 

Tags:    

Similar News