கிரிக்கெட் (Cricket)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: கடந்த ஆண்டை விட இருமடங்கு பரிசுத்தொகை அறிவித்த ஐசிசி

Published On 2025-05-15 15:41 IST   |   Update On 2025-05-15 15:41:00 IST
  • இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 30.82 கோடி பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.
  • 3-ம் இடம் பிடித்த இந்தியாவுக்கு ரூ.12.32 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இந்த போட்டி லண்டனில் ஜூன் மாதம் 11-15-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 30.82 கோடி பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 18.49 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இறுதிப் போட்டிக்கு ரூ. 49. 28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2 சீசனை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்டர் கவாஸ்கர் தொடரில் தோல்வியுற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தேர்வாகும் வாய்ப்பை இழந்தது. இருப்பினும் 3-ம் இடம் பிடித்ததால் இந்தியாவுக்கு ரூ.12.32 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிகளின் பரிசுத்தொகை விவரம்:-

வெற்றி பெற்ற அணிக்கு - ரூ. 30.78 கோடி.

2-வது இடம் பிடிக்கும் அணிக்கு - ரூ. 18.46 கோடி.

இந்தியா - ரூ. 12.31கோடி.

நியூசிலாந்து - ரூ. 10.26கோடி.

இங்கிலாந்து - ரூ. 8.2கோடி.

இலங்கை - ரூ. 7.18கோடி.

வங்கதேசம் - ரூ. 6.15கோடி.

வெஸ்ட் இண்டீஸ் - ரூ. 5.13கோடி.

பாகிஸ்தான் - ரூ. 4.10கோடி.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐசிசி-யின் தலைவராக ஜெய் ஷா பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News