கிரிக்கெட் (Cricket)

வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை

Published On 2025-10-01 10:14 IST   |   Update On 2025-10-01 10:14:00 IST
  • 7 பாகிஸ்தான் வீரர்கள் டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் பிக் பாஷ் போட்டியில் விளையாட இருந்தனர்.
  • மறுஉத்தரவு வரும்வரை இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாகூர்:

வெளிநாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கிய தடையில்லா சான்றிதழை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோற்றதை தொடர்ந்து, உள்ளூர் போட்டியில் வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. மறுஉத்தரவு வரும்வரை இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷகீன் ஷா அப்ரிடி உள்பட 7 பாகிஸ்தான் வீரர்கள் டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் பிக் பாஷ் போட்டியில் விளையாட இருந்தனர்.

அத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று நடைபெறும் சர்வதேச லீக் 20 ஓவர் போட்டிக்கான ஏலத்தில் 16 பாகிஸ்தான் வீரர்களின் பெயர் இடம் பெற்றிருந்தது. தற்போதைய உத்தரவால் அதில் அவர்கள் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News