கிரிக்கெட் (Cricket)

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கையின் முன்னணி வீரர் விலகல்

Published On 2025-08-22 03:26 IST   |   Update On 2025-08-22 03:26:00 IST
  • இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
  • இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 29-ம் தேதி நடக்கிறது.

கொழும்பு:

இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது.

இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலன்கா தலைமையிலான அந்த அணியில் முன்னணி ஆல் ரவுண்டரான வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இடம்பெறவில்லை.

இலங்கை அணி விவரம்:

சரித் அசலன்கா (கேப்டன்), பதும் நிசங்கா, நிஷான் மதுஷ்கா, குசால் மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்கே, துனித் வெல்லலகே, மிலன் ரத்நாயக்கே, மஹீஸ் தீக்சனா, ஜெப்ரி வான்டர்சே, அசித்த பெர்னாண்டோ, துஷ்மந்த சமீரா, தில்ஷன் மதுஷன்கா.

Tags:    

Similar News