கிரிக்கெட் (Cricket)
null

வீடியோ: டக்கெட் விக்கெட்டை ஆக்ரோஷமாக கொண்டாடிய சிராஜுக்கு அபராதம் விதித்த ஐசிசி

Published On 2025-07-14 15:11 IST   |   Update On 2025-07-14 15:49:00 IST
  • இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
  • 2-வது இன்னிங்சின் போது பென் டக்கெட் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார்.

லார்ட்ஸ்:

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்திய அணியின் துல்லியமான பந்து வீச்சில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. நான்காம் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 33 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சின் போது பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்திய சிராஜ், ஆக்ரோஷமாக கொண்டாடினார். டக்கெட் முகத்திற்கு முன்பு வந்து முறைத்தப்படி சென்றார்.

இதனால் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதற்காக முகமது சிராஜுக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News