டிஎன்பிஎல் 2025: நெல்லையை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்த கோவை
- நெல்லை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 165 ரன்கள் குவித்தது.
திருநெல்வேலி:
டிஎன்பிஎல் 2025 சீசனின் 18-வது போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நெல்லை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் குவித்தது. லோகேஷ்வர் 90 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷாருக் கான் 30 ரன்கள் எடுத்தார்.
நெல்லை அணி சார்பில் சோனு யாதவ், சச்சின் ராதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. கோவை அணியின் துல்லிய பந்துவீச்சில் நெல்லை அணி விரைவில் விக்கெட்டுகளை இழந்தது. முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்டினர்.
அதிகபட்சமாக அத்னன் கான் 26 ரன்னும், சோனு யாதவ் 23 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், நெல்லை அணி 98 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கோவை அணி, தொடர் தோல்விக்குப் பிறகு நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
கோவை அணி சார்பில் திவாகர் 3 விக்கெட்டும், புவனேஸ்வரன், சித்தார்த் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.