கிரிக்கெட் (Cricket)

வீடியோ: 20 போட்டிகளுக்கு பிறகு டாஸ் வென்ற இந்தியா- துள்ளிக்குதித்து கொண்டாடிய இந்திய வீரர்கள்

Published On 2025-12-06 13:30 IST   |   Update On 2025-12-06 13:30:00 IST
  • முதல் இரண்டு ஒருநாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்றது
  • 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்றதன் மூலம் 20 சர்வதேச ஒருநாள் போட்டிக்கு பிறகு இந்திய அணி டாஸ் வென்று சாதனை படைத்துள்ளது. டாஸ் வென்ற மகிழ்ச்சியில் கேஎல் ராகுல் சிரித்தப்படி அதனை கொண்டாடினார். அதனை பார்த்த தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா சிரித்தப்படி நின்றார்.

மைதானத்தில் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த இந்திய வீரர்கள் ஹர்ஷித் ரானா துள்ளிக் குதித்து இடதனை கொண்டாடினார். அருகில் ரிஷப் பண்ட் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் இதனை இருந்தனர். மேலும் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்கலும் இதனை சிரித்தப்படி கொண்டாடினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News