கிரிக்கெட் (Cricket)
null

SA-க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: ஒரு மாற்றத்துடன் இந்தியா பந்து வீச்சு தேர்வு

Published On 2025-12-06 13:05 IST   |   Update On 2025-12-06 13:08:00 IST
  • முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவும் 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன.
  • இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.


இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக திலக் வர்மா அணியில் இடம் பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News