கிரிக்கெட் (Cricket)
null

WTC இறுதிப்போட்டி: ஹேசில்வுட், இங்கிலிஷ் ஆஸ்திரேலிய அணியில் இணைந்தனர்

Published On 2025-06-07 18:49 IST   |   Update On 2025-06-07 18:50:00 IST
  • ஆர்சிபி அணிக்காக ஹேசில்வுட் விளையாடினார்.
  • பஞ்சாப் அணியில் இங்கிலிஷ் இடம் பிடித்திருந்தார்.

ஐபிஎல் 2025 சீசன் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. மே மாதம் 25ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்தது. இதனால் போர் ஏற்படும் சூழல் உருவானது.

இதன்காரணமாக ஐபிஎல் போட்டி கடந்த மாதம் 8ஆம் தேதி நிறுத்தப்பட்டது. 10ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் இடையில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து 17ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கி ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதனால் பல்வேறு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் தங்கள் தேசிய அணிக்கு விளையாட செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் (ஜூன் 11ஆம் தேதி தொடக்கம்) விளையாடுவதற்கு தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டதால் இரு அணி வீரர்களும் பிளேஆஃப் சுற்று போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

மார்கிராம், ரபாடா, ஸ்டார்க் உள்ளிட்ட வீரர்கள் பிளேஆஃப் சுற்றில் விளையாடவில்லை. அதேவேளையில் பிளேஆஃப் சுற்றுக்குக்கு முன்னேறிய ஆர்சிபி அணியில் இடம் பிடித்திருந்த ஹேசில்வுட் மற்றும் பஞ்சாப் அணியில் இடம் பிடித்திருந்த இங்கிலிஷ் ஆகியோர் இறுதிப் போட்டி வரை விளையாடினர்.

இறுதிப் போட்டி ஜூன் 3ஆம் தேதி முடிவடைந்த நிலையில் ஜோஷ் இங்கிலிஷ் புறப்பட்டார். ஹெசில்வுட் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் புறப்பட்ட்டார். இந்த நிலையில் இருவரும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் இணைந்துள்ளனர்.

Tags:    

Similar News