கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. இரு அணி கேப்டன்களால் சிரிப்பலை.. வைரலாகும் வீடியோ
- ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று இந்தியா- ஓமன் அணிகள் மோதினர்.
- இந்த போட்டியில் இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி தனது குரூப் கடைசி லீக் போட்டியில் ஓமனை எதிர்த்து விளையாடியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 188 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய ஓமன் அணி 167 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் போடும் போது இரு அணி கேப்டன்களும் லெவனில் ஆடும் வீரர்களை மறந்து விட்டனர். அதன்படி டாஸ் போடும் போது இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒன்று ஹர்ஷித் ராணா மற்றும் மற்றொரு வீரர் என சூர்யகுமார் யோசிக்க ஆரமித்தார். சிரித்தப்படியே அட கடவுளே.. நான் ரோகித் போல ஆகிவிட்டேன் என கூறி சிரித்தார்.
அதன்பிறகு ஓமன் அணி கேப்டனிடன் எத்தனை மாற்றங்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவரும் 2 மாற்றம் என கூறி விட்டு ஒரு வீரரை மறந்து விட்டார். சிரித்து கொண்டே இரண்டு மாற்றம் என கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.