null
வீடியோ: இன்னைக்கு என்னடா எழுதி கொண்டு வந்துருக்க.. அபிஷேக் பாக்கெட்டை சோதனையிட்ட SKY
- ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத்- மும்பை அணிகள் மோதின.
- இந்த போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் நடுவே நகைச்சுவையான சம்பவம் அரங்கேறியது. கடந்த 12-ந் தேதி ஐதராபாத் - பஞ்சாப் அணிகள் மோதின. அந்த போட்டியில் ஐதராபாத் அணி வீரர் அபிஷேக் சர்மா சதம் விளாசியவுடன் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு துண்டு சீட்டை எடுத்துக்காட்டி தனது சதத்தை கொண்டாடினார். அவர் அனைத்து போட்டியிலும் அதனை எடுத்து வந்ததாகவும் இந்த போட்டியில் தான் அதனை எடுத்துகாட்டியதாகவும் சக அணி வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தான் சூர்யகுமார் யாதவ், இன்னைக்கு என்னடா எழுதி கொண்டு வந்திருக்க என்பது போல அவர் பாக்கெட்டை சோதனையிட்டார். ஆனால் அவர் பாக்கெட்டில் எதுவும் கிடைக்கவில்லை. உடனே இருவரும் சிரித்தப்படி கடந்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.