ஐ.பி.எல்.(IPL)
null

ஐபிஎல் இறுதிப்போட்டி: பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

Published On 2025-06-03 19:03 IST   |   Update On 2025-06-03 19:33:00 IST
  • ஒருவேளை மழை காரணமாக இன்று போட்டி நடைபெறவில்லையென்றால் நாளை (ரிசர்வ் டே) போட்டி நடைபெறும்.
  • ரிசர்வ் நாளிலும் மழை பெய்தால் பஞ்சாப் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்

அகமதாபாத்:

18-வது ஐ.பி.எல். தொடர் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்றுகளின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

இந்த நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

Tags:    

Similar News