IPL 2025 விரைவில் மீண்டும் தொடங்கும் - கங்குலி நம்பிக்கை
- நாட்டில் போர் போன்ற சூழ்நிலை நிலவுகிறது.
- ஏராளமான இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இருப்பதால் பி.சி.சி.ஐ. இதை செய்ய வேண்டி உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தீவிரம் அடைந்து வருவதால் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் ஒருவாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஐ.பி.எல். 2025 இடைநிறுத்தப்பட்டது குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக சவுரவ் கங்குலி கூறுகையில்,
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, நடந்து வரும் ஐ.பி.எல். 2025 போட்டியை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைப்பதாக நேற்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.
நாட்டில் போர் போன்ற சூழ்நிலை நிலவுகிறது. மேலும் ஏராளமான இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இருப்பதால் பி.சி.சி.ஐ. இதை செய்ய வேண்டி உள்ளது. போட்டி ஒரு முக்கியமான கட்டத்திற்கு நெருங்கி வருவதால், ஐ.பி.எல். விரைவில் மீண்டும் தொடங்கும் என்று நம்புவோம்
குறிப்பாக தரம்சாலா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான், ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் பி.சி.சி.ஐ இதைச் செய்ய வேண்டியிருந்தது. இவை அனைத்தும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் இடங்கள்.
தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப இதை செய்வது அவசியம். காலப்போக்கில், நிலைமை சீரடைந்து போட்டிகளும் நடத்தப்படும்.
பி.சி.சி.ஐ. ஐ.பி.எல். போட்டிகளை முடித்துவிடும். மேலும் பாகிஸ்தான் நீண்ட காலத்திற்கு அழுத்தத்தை கையாள முடியாததால் இந்த நிலைமை மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று அவர் கூறினார்.