ஐ.பி.எல்.(IPL)

2022ம் ஆண்டுக்குப் பிறகு... மோசமான சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

Published On 2025-05-21 07:28 IST   |   Update On 2025-05-21 07:28:00 IST
  • நடப்பி ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே. அணி 10 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.
  • சி.எஸ்.கே. அணி தனது கடைசி போட்டியில் (மே 25) குஜராத்தை எதிர்கொள்கிறது.

டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 62-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது ராஜஸ்தான் பெற்ற 4வது வெற்றி ஆகும்.

இந்நிலையில், 2022ம் ஆண்டுக்குப் பிறகு நடப்பு சீசனிலும் அதிகபட்சமாக 10 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது

நடப்பி ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள சி.எஸ்.கே. அணி 10 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. சி.எஸ்.கே. அணி தனது கடைசி போட்டியில் (மே 25) குஜராத்தை எதிர்கொள்கிறது.

சி.எஸ்.கே. அதிக தோல்விகளை சந்தித்த ஐபிஎல் தொடர்கள்

2022 - 10 தோல்விகள்

2025 - 10* தோல்விகள்

2012 - 8 தோல்விகள்

2020 - 8 தோல்விகள்

Tags:    

Similar News