கிரிக்கெட் (Cricket)
null

ரோகித் சதம், கோலி அரைசதம்: கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி

Published On 2025-10-25 15:46 IST   |   Update On 2025-10-25 22:09:00 IST
  • அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார்.
  • விராட் கோலி அரைசதம் அடித்து தன் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவில் ஹெட் 29 ரன்னிலும் மிட்செல் மார்ஷ் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மேத்யூ ஷார்ட் 30 ரன்னிலும் நிதானமாக விளையாடிய ரென்சா அரைசதம் அடித்து 56 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற 46.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய தரப்பில் ஹர்ஷித் ரானா 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 38.3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது.

அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். விராட் கோலி அரைசதம் அடித்து தன் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ரோகித் 121 ரன்களும் விராட் கோலி 74 ரன்களும் அடித்தனர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News