கிரிக்கெட் (Cricket)

ரிஷப் பண்டின் ஆட்டத்தை விட சிறந்த, ஜாலியான ஆட்டத்தை நான் பார்த்ததில்லை- ஸ்டூவர்ட் பிராட்

Published On 2025-06-26 17:05 IST   |   Update On 2025-06-26 17:05:00 IST
  • ரிஷப் பண்டின் ஆட்டத்தை விட சிறந்த, ஜாலியான ஆட்டத்தை நான் பார்த்ததில்லை.
  • சிலர் களத்திற்குள் வருகிறார்கள் என தெரிந்தால், நாம் டிவியை ஆன் செய்து அங்கேயே அமர்ந்து விடுமோ அவர்களுள் இவரும் ஒருவர்.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த டெஸ்டில் இந்திய அணி வீரர்கள் 5 சதங்களை பதிவு செய்தனர். 5 சதங்களை அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவியது குறித்து ரசிகர்கள் உள்பட பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரிஷப் பண்டின் ஆட்டத்தை குறித்து பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

அந்த வகையில் ரிஷப் பண்டின் ஆட்டத்தை விட சிறந்த, ஜாலியான ஆட்டத்தை நான் பார்த்ததில்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ரிஷப் பண்டின் ஆட்டத்தை விட சிறந்த, ஜாலியான ஆட்டத்தை நான் பார்த்ததில்லை. அவர் செய்வதெல்லாம் உங்களை கவர்ந்து இழுக்கும். சிலர் களத்திற்குள் வருகிறார்கள் என தெரிந்தால், நாம் டிவியை ஆன் செய்து அங்கேயே அமர்ந்து விடுமோ அவர்களுள் இவரும் ஒருவர்.

என ஸ்டூவர்ட் பிராட் கூறினார்.

இந்த போட்டியில் இரு இன்னிங்சிலும் ரிஷப் பண்ட் சதம் விளாசி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News