கிரிக்கெட் (Cricket)

ரோகித் அல்லது விராட் கோலி இருந்திருந்தால்.., இங்கிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர் கருத்து..!

Published On 2025-08-04 14:29 IST   |   Update On 2025-08-04 14:29:00 IST
  • இந்தியா பிரமிக்க வைக்கும் வகையில் விளையாடியது.
  • ஆனால், முக்கியமான தருணங்களை அவர்களால் வெல்ல முடியவில்லை.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 5ஆவது போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து வெற்றி பெற 35 ரன்கள் தேவை. கைவசம் 4 விக்கெட்டுகள் உள்ளன. இதனால் பரபரப்பான நிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து தொடரில் இந்தியா பிரமிக்க வைக்கும் நிலையில் விளைடியாது என இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாய்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டேவிட் லாய்டு கூறியதாவது:-

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா பிரமிக்க வைக்கும் வகையில் விளையாடியது. ஆனால், முக்கியமான தருணங்களை அவர்களால் வெல்ல முடியவில்லை. ரோகித் அல்லது விராட கோலி விளையாடியிருந்தால், இந்தியாவின் ரிசல்ட் மாறுபட்டதாக இருந்திருக்கும். சில வீரர்கள் முக்கிய தருணங்களை மோப்பம் பிடித்து எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக முன்கூட்டியே செயல்படுவார்கள். இதில் பென் ஸ்டோக்ஸ் அற்புதமானவர்.

இவ்வாறு டேவிட் லாய்டு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News