கிரிக்கெட் (Cricket)

ENGvIND 4th Test: முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகள் - டக் அவுட்டாகி வெளியேறிய ஜெய்ஸ்வால், சுதர்சன்

Published On 2025-07-26 17:56 IST   |   Update On 2025-07-26 17:56:00 IST
  • கிறிஸ் வோக்ஸ் வீசிய முதல் ஓவரின் 4 ஆவது பந்தில் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி வெளியேறினார்.
  • முதல் ஓவரின் 5 ஆவது பந்தில் சாய் சுதர்சன் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 544 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது.

ஜோ ரூட் சதம் அடித்தார். அவர் 150 ரன்னும் , பென் டக்கெட் 94 ரன்னும் , கிராவ்லி 84 ரன்னும் , பென் ஸ்டோக்ஸ் 77 ரன்னும் ( அவுட் இல்லை), ஆலி போப் 71 ரன்னும் எடுத்தனர். ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும், பும்ரா, கம்போஜ், சிராஜ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

186 ரன்கள் முன்னிலையுடன் 4 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் குவித்து அவுட்டானார்.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 311 ரன்கள் பின்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது. கிறிஸ் வோக்ஸ் வீசிய முதல் ஓவரின் 4 ஆவது பந்தில் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி வெளியேற அடுத்த பந்திலேயே சாய் சுதர்சன் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் ரன் எதுவும் எடுக்காமலேயே இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்தது.

இதனையடுத்து கே.எல்.ராகுல் - கில் ஜோடி தற்போது விளையாடி வருகிறது. 

Tags:    

Similar News