null
ஆறுதல் வெற்றி யாருக்கு?: பாகிஸ்தான்- வங்கதேசம் போட்டி தொடங்குவதில் தாமதம்
- பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளன.
- இந்த போட்டியின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆறுதல் வெற்றியாக அமையும்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகிறது.
"ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்தியா, நியூசிலாந்து அணிகள் முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
போட்டியை நடத்தும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்தன.
இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் தனது கடைசி லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. வங்கதேச அணிக்கும் இதுதான் கடைசி லீக் போட்டியாகும். இந்த போட்டியின் வெற்றித்தோல்வி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இரண்டு அணிகளுக்கும் ஆறுதல் வெற்றியாக மட்டுமே அமையும்.
இந்த போட்டிக்கான டாஸ் 2 மணிக்கு சுண்டப்பட வேண்டும். ஆனால் போட்டி நடைபெறும் ராவல்பிண்டி மைதானத்தின் அவுட்-பீல்டு மோசமான நிலையில் உள்ளதாலும், லேசான மழை பெய்து வருவதாலும் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இதே மைதானத்தில் விளையாட இருந்தன. ஆனால் மழையால் போட்டி கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.