கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: ஆடும் லெவனில் களமிறங்கும் சிஎஸ்கே வீரர்?

Published On 2025-07-21 19:17 IST   |   Update On 2025-07-21 19:17:00 IST
  • சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என தகவல் வெளியானது.
  • நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக தொடரில் இருந்தே விலகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய அணியை பொறுத்தவரை நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக தொடரில் இருந்தே விலகியுள்ளார். அர்ஷ்தீப் சிங் 4-வது போட்டியில் இருந்து மட்டும் விலகியுள்ளார்.


இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டியில் சில மாற்றங்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து இளம் வேகப்பந்து காம்போஜ் ஆடும் லெவனில் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த போட்டியில் குல்தீப் களமிறங்குவாரா அல்லது காம்போஜ் களாமிறங்குவாரா அல்லது இருவருமே களமிறங்குவார்களா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags:    

Similar News