கிரிக்கெட் (Cricket)
null

ஆசியாவிற்கு வெளியே ஒரே இன்னிங்சில் 3 இந்திய பேட்டர்கள் சதம்: ஓர் பார்வை..!

Published On 2025-06-21 18:56 IST   |   Update On 2025-06-21 21:19:00 IST
  • 2002 இதே மைதானத்தில் லீட்ஸ் (ஹெட்டிங்லி) மைதானத்தில் ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர், கங்குலி சதம் அடித்துள்ளனர்.
  • 1986-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் கவாஸ்கர், மொஹிந்தர் அமர்நாத், ஸ்ரீகாந்த் ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஹெட்டிங்லி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால் (101), சுப்மன் கில் (147), ரிஷப் பண்ட் (134) சதம் விளாசினார்.

இதன்மூலம் ஆசியாவிற்கு வெளியே ஒரு இன்னிங்சில் சதம் விளாசி மூன்று இந்திய பேட்ஸ்மேன்கள் சாதனை பட்டியில் இந்த மூன்று பேரும் இணைந்துள்ளனர்.

இதற்கு முன்னதாக,

* 1986-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் கவாஸ்கர், மொஹிந்தர் அமர்நாத், ஸ்ரீகாந்த் ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.

* 2002 இதே மைதானத்தில் லீட்ஸ் (ஹெட்டிங்லி) மைதானத்தில் ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர், கங்குலி சதம் அடித்துள்ளனர்.

* 2006-ல் வெஸ்ட் இண்டீஸ் கிராஸ் ஐஸ்லெட்டில் சேவாக், ராகுல் டிராவிட், கைஃப் ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.

* அதன்பின் தற்போது ஜெய்ஸ்வால், கில், ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.

Tags:    

Similar News