விளையாட்டு

இந்திய ஏ அணி

செஸ் ஒலிம்பியாட்: 7வது சுற்றில் இந்திய அணிகள் வெற்றி

Published On 2022-08-05 17:03 GMT   |   Update On 2022-08-05 17:03 GMT
  • நாளை நடக்கும் 8வது சுற்றில் உக்ரைனுடன் இந்திய ஏ அணி விளையாட உள்ளது.
  • இந்திய பி அணி, 7வது சுற்றில் கியூபா அணியை 3.5-0.5 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் இந்திய ஏ அணி தொடர்ந்து முன்னேறி வருகிறது.

இன்று நடந்த 6வது சுற்று ஆட்டத்தில் இந்திய 'சி' அணியை இந்திய 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதன்பின்னர் 7வது சுற்றில் அசர்பைஜான் அணியுடன் விளையாடியது. இப்போட்டியிலும் இந்திய ஏ அணி வெற்றி வாகை சூடியது.

இந்தியா ஏ அணியின் முக்கிய வீராங்கனையான ஹம்பி கோனேரு தோல்வியடைந்தார். ஆனால், வைஷாலி மற்றும் டானியா சச்தேவ் ஆகியோர் வெற்றி பெற்றதால், 2.5-1.5 என்ற கணக்கில் அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏ அணி மொத்தம் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்து உக்ரைன், அர்மீனியா, ஜார்ஜியா தலா 12 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நாளை நடக்கும் 8வது சுற்றில் உக்ரைனுடன் இந்தியா ஏ அணி விளையாட உள்ளது.

இதேபோல் இந்திய பி அணி, 7வது சுற்றில் கியூபா அணியை 3.5-0.5 என்ற புள்ளி கணக்கில் வென்றது. இது இந்திய பி அணிக்கு 6வது வெற்றியாகும்.

Tags:    

Similar News