விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் குகேஷ் 7வது போட்டியிலும் வெற்றி

Published On 2022-08-05 22:04 IST   |   Update On 2022-08-05 22:04:00 IST
  • செஸ் ஒலிம்பியாட் போட்டி 11 சுற்றுகளாக சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது.
  • இந்திய ஓபன் பிரிவு 'சி' அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி வெற்றி பெற்றுள்ளது.

மாமல்லபுரம்:

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. 11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் ஆண்கள் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

இந்திய 'பி' அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் குகேஷ் தொடர்ந்து அசத்தி வருகிறார். 6 சுற்றுகளில் விளையாடிய அவர், 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றார். இன்று நடந்த 7வது போட்டியிலும் வெற்றி வாகை சூடினார். இன்றைய போட்டியில், கியூபா அணி வீரர் கார்லஸ் டேனியலை 46 வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இந்திய ஓபன் பிரிவு 'சி' அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

Tags:    

Similar News