விளையாட்டு

சென்னை மாவட்ட பள்ளிகள் கைப்பந்து போட்டி 31-ந்தேதி தொடக்கம்

Published On 2023-08-22 10:53 IST   |   Update On 2023-08-22 10:53:00 IST
  • சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் அணிகள் இதில் கலந்து கொள்ளலாம்.
  • இ-மெயில் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்யலாம்.

சென்னை:

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் மற்றும் சான் அகாடமி கல்வி குழுமம் சார்பில் பள்ளி அணிகளுக்கான 5-வது மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 31-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை நடக்கிறது. சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் அணிகள் இதில் கலந்து கொள்ளலாம்.

இதில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் வருகிற 28-ந் தேதிக்குள், 'செயலாளர், சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம், எழும்பூர், சென்னை-600008 என்ற முகவரியிலோ அல்லது chennaidistrictvolleyballassn@gmail.com என்ற இ-மெயில் மூலமோ தங்களது பெயர்களை பதிவு செய்யலாம் என்று சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் சி.ஸ்ரீகேசவன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News