இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி: ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வது சந்தேகம்
- போட்டியின் பாதியில் விக்கெட் கீப்பரை மாற்றுவதை நாங்கள் விரும்பவில்லை.
- முழு உடற்தகுதியுடன் இருந்தால், அடுத்த டெஸ்டில் பேட்டிங் மற்றும் கீப்பிங் இரண்டையும் செய்வார் என்றார்.
இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் லார்ட்சில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கைவிரலில் காயம் அடைந்தார். இதையடுத்து அவருக்கு பதிலாக துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பிங் செய்தார். ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய மட்டும் வந்தார்.
இந்த நிலையில் காயம் காரணமாக 4-வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சந்தேகம் நிலவுகிறது. இதுதொடர்பாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரையான் டென்டஸ்சாட் கூறியதாவது:-
4-வது டெஸ்டில் ரிஷப் பண்ட் விளையாடுவார். ஆனால் அவர் விக்கெட் கீப்பிங் செய்வது பற்றி உறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. கீப்பிங் தான் அவர் குணமடைவதில் கடைசிப் பகுதி. அவர் கீப்பிங் செய்ய முடியுமா என்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். போட்டியின் பாதியில் விக்கெட் கீப்பரை மாற்றுவதை நாங்கள் விரும்பவில்லை. அவர் முழு உடற்தகுதியுடன் இருந்தால், அடுத்த டெஸ்டில் பேட்டிங் மற்றும் கீப்பிங் இரண்டையும் செய்வார் என்றார்.