விளையாட்டு
வார்னர்-பாவெல்

வார்னர், பாவெல் அதிரடி: ஐதராபாத் அணிக்கு எதிராக 207 ரன்கள் குவித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்

Published On 2022-05-05 16:00 GMT   |   Update On 2022-05-05 16:00 GMT
மும்பையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துவக்க வீரர் வார்னர் அதிரடியாக ஆடி 92 ரன்கள் குவித்தார்.
மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி, பீல்டிங்கை தேர்வு செய்ய, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. 

டெல்லி அணியின் துவக்க வீரர் மன்தீப் சிங் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில், டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். 34 பந்துகளில் அரை சதம் கடந்த வார்னர், தொடர்ந்து சதத்தை நோக்கி முன்னேறினார். 

அதேசமயம் மறுமுனையில் மிட்செல் மார்ஷ் 10 ரன்கள், கேப்டன்  ரிஷப் பண்ட் 26 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் வார்னருடன் பாவெல் இணைய, ஆட்டம் விறுவிறுப்படைந்தது. பந்துகளை  சிக்சர்களாக விரட்டிய பாவெல் அரை சதம் கடக்க, டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. 

வார்னர் 92 ரன்களுடனும், பாவெல் 67 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார், சீன் அப்பாட், ஸ்ரேயாஸ் கோபால் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்குகிறது. 
Tags:    

Similar News