விளையாட்டு

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை

Published On 2026-01-30 03:58 IST   |   Update On 2026-01-30 03:58:00 IST
  • தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடந்து வருகிறது.
  • இதில் இந்திய வீராங்கனை ஈஷா ராணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

பாங்காக்:

தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது.

இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீராங்கனை இஷாராணி பரூவா, தைவான் வீராங்கனை உடன் மோதினார்.

முதல் செட்டை 21-13 என இஷாராணி வென்றார். பதிலடியாக தைவான் வீராங்கனை 2வது செட்டை 21-14 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை இஷாராணி 21-14 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News