விளையாட்டு
ஐ.பி.எல். கோப்பை

ஐபிஎல் 2022 - பிளே ஆப், இறுதிப்போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

Published On 2022-05-03 13:27 GMT   |   Update On 2022-05-03 13:27 GMT
15-வது ஐபிஎல் தொடரில் இதுவரை 47 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன.
புதுடெல்லி:

ஐ.பி.எல். தொடரின் 15-வது சீசன்  கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலால் ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டிகள் மும்பை மற்றும் புனே நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஐ.பி.எல். பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடங்களை பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார் .

அதன்படி, முதல் பிளே ஆப் சுற்று மற்றும் எலிமினேட்டர் சுற்று போட்டிகள் கொல்கத்தாவிலும், இரண்டாவது பிளே ஆப் மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத்திலும் நடைபெறும் என தெரிவித்துள்ளார் .

முதல் தகுதிச்சுற்று  மே 24 அன்றும், எலிமினேட்டர் சுற்று போட்டி மே 25-ம் தேதிகளில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

2-வது தகுதிச்சுற்று  மே 27 அன்றும், இறுதிப்போட்டி மே 29 அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிப்போட்டிக்கு 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News