செய்திகள்
ரோகித் சர்மா, டிம் சவுதி

2வது டி20 போட்டி - தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா நியூசிலாந்துடன் இன்று மோதல்

Published On 2021-11-18 23:32 GMT   |   Update On 2021-11-18 23:32 GMT
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
ராஞ்சி:

இந்தியா, நியூசிலாந்து இடையே ஜெய்ப்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 2வது டி20 போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்றிரவு நடக்கிறது.

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய சில நாட்களில் களமிறங்கினாலும் நியூசிலாந்து அணி எல்லா வகையிலும் சவால் அளித்தது. முதலில் பேட் செய்து 164 ரன் சேர்த்த அந்த அணி, பந்துவீச்சில் கடைசி ஓவர் வரை ஆட்டத்தைக் கொண்டு சென்றது. 2 பந்து மீதம் வைத்து தான் இந்திய அணியால் வெற்றி பெற முடிந்தது. 

இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் நியூசிலாந்து வீரர்கள் பதிலடி கொடுக்க போராடுவார்கள். 

முதல் ஆட்டத்தில் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா (48 ரன்), சூர்யகுமார் யாதவ் (62 ரன்) ஆகியோரது பேட்டிங் சிறப்பாக இருந்தது. பந்து வீச்சில் அஸ்வின், புவனேஷ்வர் குமார் கட்டுக்கோப்புடன் வீசி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

எனவே, இந்த போட்டியில் வென்று டி20 தொடரை இந்தியா கைப்பற்ற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

Tags:    

Similar News