செய்திகள்
பவினா படேல்

டோக்கியோ பாராலிம்பிக்- இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்த பவினா படேல்

Published On 2021-08-27 17:40 IST   |   Update On 2021-08-27 22:23:00 IST
டோக்கியோ பாராலிம்பிக்கில், இன்று நடைபெற்ற வில்வித்தை தகுதிச் சுற்றில் இந்திய வீரர் ராகேஷ் குமார் 3வது இடத்தைப் பிடித்து அசத்தினார்.
டோக்கியோ:

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. இதில், டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறினார். 

இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் உலகின் 2ம் தரநிலை வீராங்கனையான போரிஸ்லாவை (செர்பியா) 11-5, 11-6, 11-7 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். அரையிறுதிக்கு முன்னேறியதால், இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் பவினா.

இதேபோல், ஆடவருக்கான வில்வித்தை தகுதிச் சுற்றில் இந்திய வீரர் ராகேஷ் குமார் 3வது இடத்தைப் பிடித்து அசத்தினார். அவர் மொத்தம் 699 புள்ளிகளைப் பெற்றார். இறுதிச்சுற்றில் அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Similar News