செய்திகள்
குத்துச்சண்டை: இந்திய வீரர் ஆஷிஷ் குமார் தோல்வி
சீன வீரருக்கு எதிரான ஐந்து சுற்றுகளில் ஒன்றைக்கூட கைப்பற்ற முடியாமல், இந்திய வீரர் ஆஷிஷ் குமார் முதல் சுற்றோடு வெளியேறினார்.
குத்துச்சண்டையில் ஆண்களுக்கான (69-75 கிலோ) மிடில் வெயிட் பிரிவில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் சீனாவைச் சேர்ந்த எர்பிக் டுஹெட்டாவை எதிர்கொண்டார்.
இதில் ஆஷிஷ் குமார் 28-29, 28-29, 28-29, 28-29, 28-29 (0-5) என ஒரு ரவுண்டை கூட வெல்ல முடியாமல் தோல்வியடைந்தார்.