செய்திகள்
கோப்புபடம்

தமிழ்நாடு பிரிமீயர் லீக்: டாஸ் வென்ற திண்டுக்கல் பந்து வீச்சு தேர்வு

Published On 2021-07-25 14:16 GMT   |   Update On 2021-07-25 14:16 GMT
தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
சென்னை:

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் திண்டுக்கல் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

லைகா கோவை கிங்ஸ் 2 போட்டியில் 1 வெற்றி, ஒரு முடிவு இல்லை ஆகியவை மூலம் 3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஒரு போட்டியில் விளையாடி, அதில் தோற்று கடைசி இடத்தில் உள்ளது.

கோவை அணி வீரர்கள்:-

கங்கா ஸ்ரீதர், சாய் சுதர்சன், வெங்கட்ராமன், முகிலேஷ், ஷாரூக் கான், சுரேஷ் குமார், அபிஷேக் தன்வார், செல்வா, விக்னேஷ், அஜித் ராம், ஸ்ரீனிவாசன்.

திண்டுக்கல் அணி வீரர்கள்;-

அருண், நிஷாந்த், மணிபாரதி, மோஹித், விவேக், விக்னேஷ், லோகேஷ்வர், குர்ஜப்நீத், சுதீஷ், சுவாமி, சிலம்பரசன்.
Tags:    

Similar News