செய்திகள்
இரு அணிகளின் கேப்டன்கள்

டிஎன்பிஎல் கிரிக்கெட்- டாஸ் வென்று பீல்டிங் செய்கிறது திருச்சி வாரியார்ஸ்

Published On 2021-07-25 10:14 GMT   |   Update On 2021-07-25 10:14 GMT
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி அணி டாஸ் வென்று, பீல்டிங்கை தேர்வு செய்தது.
சென்னை:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது ஆட்டம் இன்று பிற்பகல் தொடங்கியது. இதில், மதுரை பாந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியார்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி, மதுரை பாந்தர்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது. துவக்க வீரர்களாக அருண் கார்த்திக், ராஜ்குமார் களமிறங்கினர்.

மதுரை அணி: அருண் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ராஜ்குமார், அனிருத் சீதாராம், சதுர்வேதி (கேப்டன்) ஜெகதீசன் கவுசிக், ஷாஜகான், மிதுன், ராமலிங்கம் ரோகித், சிலம்பரசன், கிரண் ஆகாஷ், ஆயுஷிக் ஸ்ரீனிவாஸ்.

திருச்சி அணி: அமித் சாத்விக், சுமந்த் ஜெயின், முகுமது அட்னன் கான், நிதிஷ் ராஜகோபால், அந்தோணி தாஸ், சுனில் சாம், ஆதித்ய கணேஷ் (கீப்பர்), மதிவண்ணன், ரகில் ஷா (கேப்டன்), பொய்யாமொழி, சரவண குமார்.
Tags:    

Similar News