செய்திகள்
டோக்கியோ ஒலிம்பிக்: வில் வித்தை அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள்-வீராங்கனைகள் விவரம்
பாரிசில் நடந்த உலக வில்வித்தை போட்டியில் 3 தங்க பதக்கங்களை வென்ற தீபிகா குமாரி இந்திய அரசால் அர்ஜூனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர்.
தருண் தீப் ராய் - வில் வித்தை வீரர் , வயது 37 , 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் நாள் சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாம்ச்சி மாவட்டத்தில் பிறந்தவர். உலக அளவிலான போட்டிகளில் 2 முறை வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள இவருக்கு இந்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி சிறப்பித்துள்ளது. வில்வித்தை போட்டியில் உலக அரங்கில் 22 வது இடத்தை பிடித்துள்ளார்.
அட்டானுதாஸ் - வில்வித்தை வீரரான இவருக்கு வயது 29. 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி மேற்குவங்க மாநிலம், பராநகரில் பிறந்தவர். உலக அளவிலான போட்டிகளில் 2 முறை தங்க பதக்கங்களை வென்றுள்ள இவருக்கு இந்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்துள்ளது. வில்வித்தை போட்டியில் உலக அரங்கில் இவர் இடத்தில் உள்ளார்.
பிரவீன் ரமேஷ் ஜாதவ் - வில் வித்தை வீரரான இவருக்கு வயது 25. 1996 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் சாத்தாரா மாவட்டத்தில் பிறந்தவர். உலக அளவிலான போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள இவர், ஆடவர் வில்வித்தை போட்டிகளில் உலக அரங்கில் 77 வது இடத்தில் உள்ளார்.
தீபிகா குமாரி - வில்வித்தை வீராங்கனையான இவருக்கு வயது 27. 1994 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தவர். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் சக வீரர் அதானு தாஸின் மனைவி. சமீபத்தில் பாரிசில் நடந்த உலக வில்வித்தை போட்டியில் 3 தங்க பதக்கங்களை வென்ற இவர், இந்திய அரசால் அர்ஜூனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர். மகளிர் வில்வித்தை போட்டியில் உலக அரங்கில் முதல் இடத்தில் உள்ளார்.