செய்திகள்
சன்ரைசர்ஸ் ஐதராபாத்

கொரோனாவை எதிர்கொள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி உரிமையாளர் ரூ. 30 கோடி நன்கொடை

Published On 2021-05-10 10:54 GMT   |   Update On 2021-05-10 10:54 GMT
இந்தியா கொரோனா தொற்றின் 2-வது அலையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் பிரபலங்கள் நன்கொடை வழங்கி வருகின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தினந்தோறும் பாதிப்பு 4 லட்சத்தை தொட்ட வண்ணம் உள்ளதால் ஆக்சிஜன் மற்றும் மருந்து தட்டுப்பாடுகள் நிலவி வருகிறது.

இதனால் வெளிநாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள், பிரபலங்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் ஐபிஎல் போட்டியில விளையாடும் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் உரிமையாளரான சன் டிவி நெட்வொர்க் கொரோனாவை எதிர்கொள்ள 30 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளது.

மத்திய அரசு, மற்றும் மாநில அரசுகள், என்ஜிஓ போன்றவற்றால் நடைபெறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இந்த பணம் நன்கொடையாக வழங்கபடுகிறது எனத் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News