செய்திகள்
ஆர்சிபி வீரர்கள்

ஆஸி. வீரர்கள் மாலத்தீவு சென்றடைந்தனர்: ஓட்டலில் தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள்

Published On 2021-05-07 10:38 GMT   |   Update On 2021-05-07 10:38 GMT
இந்தியாவில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியா செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு வீரர்கள் மாலத்தீவில் இருந்து சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது கொல்கத்தா மற்றும் டெல்லி அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் உடனடியாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டது.

வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்பி கொண்டிருக்கின்றனர். உள்நாட்டு வீரர்கள் அவர்களுடைய வீட்டிற்கு சென்றுள்ளனர்.

தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வீரர்கள், சொந்த நாடு திரும்புவதில் சிக்கல் ஏதுமில்லை. இந்தியாவில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு வர ஆஸ்திரேலியா தடைவிதித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய நாட்டு வீரர்கள் சொந்த நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.



அவர்களை மாலத்தீவிற்கு அனுப்பி, அங்குள்ள ஓட்டல்களில் தனிமைப்படுத்த வைத்து அதன்பின் ஆஸ்திரேலியா அனுமதியுடன் சொந்த நாடு திரும்ப பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. முதற்கட்டமாக ஆஸ்திரேலியா வீரர்களை வாடகை விமானம் மூலம் மாலத்தீவிற்கு அனுப்பி வைத்துள்ளது.

மாலத்தீவு சென்றடைந்த ஆஸ்திரேலிய வீர்ரகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஓட்டலில் தனிமைப்படுத்திக் கொள்வார்கள். அதன்பின் ஆஸ்திரேலியா அரசின் அனுமதி கிடைத்த பின் சொந்த நாடு திரும்புவார்கள்.
Tags:    

Similar News