செய்திகள்
விராட் கோலி, அனுஷ்கா சர்மா

கொரோனாவை எதிர்கொள்ள 2 கோடி ரூபாய் நன்கொடை அளித்த விராட் கோலி தம்பதி

Published On 2021-05-07 10:15 GMT   |   Update On 2021-05-07 10:15 GMT
இந்தியாவில் கொரோனா அதிகரிப்பால் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், விராட் கோலி தம்பதி 2 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2-வது அலை உக்கிரமாக உள்ளது. இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. 2-வது அலையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படுகிறது.

இதனால் மிகப்பெரிய அளவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பல்வேறு நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன. 

இந்தியாவில் உள்ள பெரும்பாலானோரும் மருத்துவ உபகரணங்கள் வாங்க தங்களால் முயன்ற நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

இந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி- பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதி 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. மேலும், ‘Ketto’ நன்கொடை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 7 கோடி ரூபாய் நன்கொடை வசூலிக்க திட்டமிட்டுள்ளது. நன்கொலை அளிக்குமாறு கேட்டுக்கொண்ட கோலி 2 கோடி ரூபாயும் வழங்கியுள்ளார்.
Tags:    

Similar News